முன் பதிவில் ஞானிகள் எப்படி அந்த ஞான நிலையை அடைந்தார்கள் என்று பார்த்தோம் இந்த பதிவில் அவர்களின் நிலை (உருவம் )எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீக அன்பர்களே.
அந்த ஞான நிலையை அடைந்த ஞானிகள் தான் ஆதி அந்த பொருளாகவும் அதாவது முதலும் முடிவும் இல்லாத நிலையே நான் தான் என்ற நிலையை அடைந்து விடுகிறார்கள் என கூறுகிறார்
பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களும் தானே என்றும்
நானே சக்தியும் சிவமுமாக இருக்கிறேன் என்றும்
பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா என சொல்லக்கூடிய ஐவரும் நானாகவே இருக்கிறேன் என்றும்
ஏழு உலகங்களாக உள்ள - பூலோகம், புவர்உலகம் , சுவர்உலகம் , மகரஉலகம் , தபோ உலகம் , சனஉலகம் சத்தியஉலகம் எல்லாம் உறுதிகொண்டு நானே எல்லாம் என்று இருப்பார்.
நானே அவன் (கடவுள்) என்ற நிலையில்
🔥 சோதிமயமாக இருப்பார் ஞானிகள் என்கிறார் அகத்தியர்.
🎍 இது தான் பேரின்பம், முக்தி நிலை
இதைத்தான் சித்தர்கள் விரும்பி அத்தகைய தவத்தை செய்து அந்த நிலையை அடைந்து விடுகிறார்கள்.
உடலுக்கும் உயிர்க்கும் என்றும் அழிவில்லை
இப்படி உள்ளவர்களை கண்ணில் காட்டுங்கள் என்கிறார்களே எப்படி அவர்களை காட்டுவது.
திருக்குறள்
"வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்"
வேண்டியவற்றை தவத்தால் அடைய முடியும் ஆதலால் தவத்தை முயன்று மேற்கொள்ளவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
அவர்களுடைய பெருமைகளை இவ்வளவுதான் என்றும் சொல்லமுடியாது
"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று "